முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

வாக்களிப்பதை கட்டாயமாக்குமாறு உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், வாக்களிப்பது தொடர்பான கோரிக்கைகளை மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்திடமே அளிக்க வேண்டும் என வாதிட்டார். மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கொகாய் தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, இது போன்ற ஒரு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019 பாராளுமன்றத் தேர்தல் சமீபத்தில் முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு  67.47 சதவீதமாக இருந்தது. தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் தேர்தலில் வாக்களிப்பது குறித்து வாக்களர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது. எனினும் 2014-ம் ஆண்டு வாக்கு சதவிகிதத்தைவிட இம்முறை 1.03 சதவீதம் தான் வாக்குப்பதிவு அதிகரித்தது. எனவே, தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த மனு ஏற்றுகொள்ளும்படி இல்லை. ஏனென்றால் தேர்தல் சீர்திருத்தங்களில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து