முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் குண்டு வெடிப்பு - 2 ராணுவ வீரர்கள் பலி

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பிசின் மாவட்டம். இங்கு பாதுகாப்பு படைப்பிரிவினர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அவர்கள் சென்ற வாகனம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொரு வீரர் படுகாயம் அடைந்தார். விசாரணையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டு பின்பு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 10 நாட்களில் பலூசிஸ்தான் மாகாணத்தில் நடக்கும் 3-வது குண்டுவெடிப்பு நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து