முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ராஜ்பூர் : சத்தீஷ்கர் என்கவுண்டரில் மாவோயிஸ்டுகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற இந்த இந்த என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து