முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் சமரச உடன்பாடு: தலிபான்கள் தயாராக உள்ளதாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

தோஹா : ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில், சமரச உடன்பாட்டுக்கு தலிபான்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நடந்து வருகிற போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. 7 சுற்று பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளன.  8-வது சுற்று பேச்சு வார்த்தையில் பங்கேற்க கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா வந்து சேர்ந்துள்ள அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஜல்மே கலீல் ஜாத் கூறுகையில், உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தயார் என தலிபான்கள் சமிக்ஞை செய்துள்ளனர். நல்ல உடன்பாட்டுக்கு நாங்களும் தயார் என கூறினார். ஜல்மே கலீல் ஜாத் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் இருப்பு என்பது நிபந்தனை அடிப்படையிலானது. படைகளை திரும்பப் பெறுவதும் நிபந்தனை அடிப்படையிலானது என குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் சமரச உடன்பாடு ஏற்படுத்த வசதியாக அங்குள்ள 6 ஆயிரம் துருப்புகளையும் திரும்பப் பெற அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் தலிபான்களுடன் நடத்துகிற பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் பாகிஸ்தான் தங்களுக்கு உதவும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டு விட்டால், அது ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதற்கு வழி வகுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து