முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்தியவனின் தங்கையும் கொலை

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரைக் கொன்றவன் அந்த தாக்குதலில் தனது சொந்த தங்கையையும் கொலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

24 வயதான கான்னர் பெட்ஸ் எனும் வெள்ளையினத்தைச் சேர்ந்த இளைஞன் மேற்கொண்ட அந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 6 பேர் கறுப்பினத்தவர்கள் ஆவர். இறந்தவர்கள் 22 வயது முதல் 57 வயதானவர்கள் வரை இருந்தனர். இறந்தவர்களிலேயே இளையவர் 22 வயதான மேகன் பெட்ஸ், துப்பாக்கிச் சூடு நடத்தியவனின் சொந்த தங்கை ஆவார். மேகன் உள்பட 4 பெண்கள், 5 ஆண்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். குண்டடி பட்ட 27 பேரில், 4 பேரின் நிலை கவலைக்கிடமாகவும், ஒருவரின் நிலை மிகவும் மோசமாகவும் உள்ளது. துப்பாக்கிச் சூடு தொடங்கிய ஒரே நிமிடத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியவனை சுட்டுக் கொன்றதாக மேயர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து