முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனிலிருந்து ஸ்பெயின் புறப்பட்டு சென்ற விமானத்தில் எழுந்த புகையால் அவசரமாக தரையிறக்கம்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டனிலிருந்து ஸ்பெயின் புறப்பட்டு சென்ற விமானத்தில் திடீரென புகைமூட்டம் நிலவியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. லண்டனில் உள்ள ஹூத்ரூ விமான நிலையத்திலிருந்து பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று 175 பயணிகள், 6 பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் 2 விமானிகளுடன் ஸ்பெயின் நோக்கி சென்றது. விமானம் தரையிறங்க 10 நிமிடங்களே இருந்த நிலையில் விமானத்திற்குள் திடீரென கடும் புகை மூட்டம் உருவானது. இதனால் பயணிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.

நிலமையை புரிந்து கொண்ட விமானிகள் இது குறித்து வேலன்சியா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கினார். பின்னர் அதிலிருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு சுவாச பாதிப்புக்குள்ளான 3 பயணிகளுக்கு உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து