முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் கனமழை: தாய்-மகள் பரிதாப பலி

வெள்ளிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

நீலகிரி : நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் இருவரும் பரிதாபமாக பலியாகினர்.   

கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், நடுவட்டம் இந்திரா நகரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், அமுதா (34) அவரது மகள் காவ்யா (10) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து