முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சியில் லல்லுவுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : ரா‌‌ஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் சந்தித்து பேசினார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ரா‌‌ஷ்டிரிய ஜனதாதளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜார்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அங்கு லல்லு பிரசாத் யாதவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் சந்தித்து பேசினார். பின்னர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறும் போது,

பிறந்த நாளையொட்டி ஆசி பெறுவதற்காக  லல்லு பிரசாத்தை சந்தித்தேன். விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தினேன். அப்போது அவர், மகா கூட்டணியில் தொடர வேண்டும் என்றும், அப்போது தான் ஓட்டுகள் சிதறாமல் ரகுபர்தாஸ் (பா.ஜ.க.) அரசை தோற்கடிக்க முடியும் என்றும் கூறினார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து