முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ., முரளிதரன் மறைவு: இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இரங்கல்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தளி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., முரளிதரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றி்யக்குழு முன்னாள் தலைவருமான கே.வி.முரளிதரன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். அன்புசகோதர் முரளிதரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து