முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு:

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- பாம்பன் ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் திருக்கோயில் உள்பட முக்கிய பகுதிகளில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு கறுதி ஆயுதம் தாங்கி போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர்.
  சுதந்திர தினத்தையொட்டி ராமேசுவரம் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் போலீஸார்கள் கொண்டு வந்துள்ளனர்.அதன் ஒரு பகுதியாக பாம்பன் ரயில்பாலத்தில் ஆயுதம் தாங்கி போலீஸார்கள் சுழற்ச்சி முறையில் 24 மணி நேரமும்  பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அதி நவீன கருவியுடன் கடலில் அமைக்கப்பட்டுள்ள  ரயில் பாலத்தில் தண்டவாளங்கள்,இரும்பு கர்டர்கள்,தூக்கு பாலம் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் மேற்கொண்டும், பாலத்தில் ரயில் வண்டி வந்து, செல்லும்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுபோல ராமேசுவரம் பகுதிக்கு வரும் வாகனங்களை மண்டபம் பூங்கா பகுதியிலுள்ள  சுங்கச்சாவடி பகுதியிலேயே போலீஸார்கள் சோதனை செய்யப்பட்ட பின்னர்  பாம்பன் சாலைப்பாலத்தில் வாகனங்களையும்,அதுபோல ராமேசுவரம் ராமாநாதசுவாமி திருக்கோயில் வரும் பக்தர்களை முழுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.பாம்பன் மற்றும் ராமேசுவரம் ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையம்,அஞ்சல் அலுவலகம் மற்றும்,தனுஸ்கோடி,முகுந்தராயர் சத்திரம் ஆகிய கடல் பகுதிகள் உள்பட ராமேசுவரம்  கடலோர பகுதிகளையும் உளவுத்துறை மற்றும் தனிப்பிரிவு போலீஸார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து