எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போர்ட் ஆப்ஸ்பெயின்: விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இந்திய அணி தனது முத்திரையை பதித்தது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்ஸ்பெயினில் நடந்தது. இந்திய அணியில் ஒரே மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கீமோ பால், பாபியன் ஆலென் இடம் பெற்றனர்.
‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 2-வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.22 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியில் ஆட்டத்திற்கான ஓவர் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய ஹெட்மயர், ஷாய் ஹோப் ஜோடி ரன்களை வெகுவாக குவிக்க தொடங்கினர். ஆனால் ஆட்டத்தின் 24.5 வது ஓவரில் சமி வீசிய பந்தில் ஹெட்மயர் 25 (32) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இறங்கிய நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினார். நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களாக விளாசி தள்ளி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார். ஆனால் இந்த ஜோடியின் ஷாய் ஹோப் 24 (52) விக்கெட்டை இந்திய அணி வீரர் ஜடேஜா பிரித்தார். அவரை தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் களம் இறங்க ஆட்டத்தின் 30.1வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் 16 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன் பின் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஜேசன் ஹோல்டர் 14 (20), கார்லோஸ் பிராத்வைட் 16 (14) ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது. இறுதியில் பாபியன் ஆலென் 6(7) ரன்னும், கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும், சாஹல், ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.
இதன்மூலம் 255 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் ஆட்டம் சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்நிலையில் ஆட்டத்தின் 2.4வது ஓவரில் ரோகித் சர்மா 10 (6) எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார், அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். தவான் மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க துவங்கினர். இவர்களின் ஜோடியை பிரிக்க நினைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஃபேபியன் ஆலன் தனது பந்து வீச்சில் ஆட்டத்தின் 12.2 ஓவரில் தவானின் 36 (36) விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பந்த் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன்பின் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாட இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோச் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் கேதர் ஜாதவ் களம் இறங்க ஆட்டம் தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கியது.
அதிரடி ஆட்டத்தை அணியின் கேப்டன் விராட் கோலி 30 வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 32.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி 99 பந்துகளை சந்தித்து 114 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஃபேபியன் ஆலன் 2 விக்கெட்களையும், கெமர் ரோச் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.,வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேரடி ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது இந்திய அணிக்கு பெறுமை சேர்த்துள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024