முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தாங்கும் ஆஷஸ் தொடரே :கங்குலி

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை உயிரோட்டமாக வைத்திருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். இந்த தொடரானது 5 டெஸ்ட் போட்டிகளை கொண்டது. இதுவரை நடைபெற்றுள்ள 70 தொடர்களில் 33 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 முறை இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 5 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது.

தற்போது சர்வதேச 20 ஓவர்கள் போட்டிகள் மற்றும் ஐ.பி.எல். போட்டிகள் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கு ஆதரவு குறைந்து வருகிறது. இந்நிலையில், ஆஷஸ் தொடர் நடைபெறுவதாலேயே டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அழியாமல் உள்ளது என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கங்குலி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 251 ரன்கள் வித்தியாத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் டிரா ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து