எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்து நலத்திட்டஉதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து எடப்பாடி மற்றும் கொங்கணாபுரத்தில் இந்த திட்டத்தினை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
எடப்பாடி தொகுதி மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகின்றது. எடப்பாடி தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, உயர்கல்வி கற்பதற்கு அம்மா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை வழங்கி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர் பயிலக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்தார். அம்மாவின் அரசினால், ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம், கவுண்டம்பட்டியிலிருந்து வெல்லாண்டிவலசு வரை பாலம், கவுண்டம்பட்டியிலிருந்து நகரத்திற்கு வருவதற்கான நடைபாலம், பால் சொசைட்டி, கூடுதல் பள்ளிக் கட்டிடம், மாதிரி பள்ளி ஆகியவை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியிலிருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகளை செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியிலிருந்து புறவழிச் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சார கோட்ட அலுவலகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளை பொருட்களை சேமித்து வைக்க மார்கெடிங் கமிட்டி மூலம் வெள்ளரி வெள்ளியில் கிடங்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. சரபங்கா நதியின் இரண்டு பகுதிகளும் சீர் செய்யப்படும். சரபங்கா நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். கோனேரிப்பட்டியில் கட்டிக் கொடுத்த ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும். தொழில் வளத்தைப் பெருக்க, எட்டிக்குட்டைமேட்டில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மேட்டூரிலிருந்து வரும் உபரி நீரை நீரேற்று மூலம், ரூபாய் 565 கோடி மதிப்பீட்டில் மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எடப்பாடி நகர மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கிட, பூலாம்பட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரித்து வழங்கும் திட்டத்தினை அம்மா துவக்கி வைத்தார்.
எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஒன்றியங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கி பாதுகாக்கப்பட்ட காவேரித் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும், விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் காவேரிக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செங்கோட்டிலிருந்து ஓமலூர் வரையுள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றியமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகிலுள்ள சாலை, ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எட்டிக்குட்டைமேட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளாளபுரத்தில் மாதிரிப் பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எட்டிக்குட்டைமேட்டில் க்ஷ.நுன., கல்லூரி இந்த ஆண்டு துவங்கப்படவுள்ளது. சமுத்திரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு கொங்கணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கொங்கணாபுரத்தில் பேருந்து நிலையம், சாக்கடை வசதி, கொங்கணாபுரம் சந்திப்பில் நீரூற்று போன்ற பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கணாபுரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த சாலை வசதிகளை அமைத்துக் கொடுத்த அரசு அம்மாவின் அரசு. இந்திய அளவில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கின்றது. குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 2017-2018ஆம் ஆண்டில் 1519 ஏரிகளும், இரண்டாம்கட்டமாக 2018-2019ஆம் ஆண்டில் 1511 ஏரிகளும் தூர்வாரப்பட்டுள்ளன. 2019-2020ஆம் ஆண்டில் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் 1829 ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளையும், ஆயக்கட்டுதாரர்களையும் ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் மிகப்பிரம்மாண்டமான உலகத் தரத்தில் மலர் ஏல மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
எல்லாம் வல்ல இறைவன் அருளால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது. தற்பொழுது அணைக்கு சுமார் 33 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, எஞ்சிய 5 அடியும் உயர்ந்து விரையில் அணை நிரம்பும். இதன் மூலம் மேட்டூர் மேற்கு மற்றும் கிழக்குக்கரை விவசாயிகள் மற்றும் டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வரும் ஒரே அரசு அம்மாவின் அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.