எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் பேரூராட்சிப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரநடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து நலத்திட்டஉதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை கொடுத்து, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மனுதாரர்களின் தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதை லட்சியமாக எண்ணி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் இணைந்து வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் வீடில்லா மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை விரைவாக செயல்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 39,000 ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏரிகளை எடுத்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், குட்டைகள், ஊரணிகளில் தண்ணீரை சேமிக்க ரூபாய் 1,250 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு, அப்பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், பொழிகின்ற மழை நீர் சேமிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் உயரக் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உடலுக்கு உயிர் முக்கியம் போல் விவசாயத்திற்கும், மக்களுக்கும் நீர் முக்கியம். எனவே, இத்திட்டத்தில் விவசாயப்பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கண்ணுக்கு இமை போல ஏரிக்கு இமையாக இருந்து இத்திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்.
ஓடைகள், நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு 3 ஆண்டு காலத் திட்டமாக ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டாண்டு காலத்தில் தடுப்பணை கட்டுவதற்கு ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்நடைபெற்று கொண்டிருக்கின்றது. சுகாதாரத் துறையின் மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் மற்றும் 239 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூ.10 கோடி மதிப்பீட்டில் சாலைகளை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ. 25,000 நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2,241 பயனாளிகளுக்கு ரூ. 5.60 கோடி நிதியுதவியும், 9,828 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பட்டம், பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு ரூ. 50,000 நிதியுதவியிடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,526 பயனாளிகளுக்கு ரூ. 7.63 லட்சம் நிதியுதவியும், 7,172 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 917 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை மக்களுக்காக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், எதிர்க்கட்சிகள் அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே, திட்டமிட்டு தவறான பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார்கள். அ.தி.மு.க. அரசு மக்களின் அரசு, மக்களுக்கான திட்டங்களை அளிப்பது தான் லட்சியம். அந்த லட்சியப் பாதையில் அ.தி.மு.க. அரசு சென்று கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களின் இல்லங்களுக்கு கொண்டு சேர்க்கின்ற அளவிற்கு அரசு செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.