முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை பேரிடரால் பாதிப்படைந்த மாநிலங்களுக்கு ரூ.4,432 கோடி - மத்திய அரசு ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கடந்த நிதியாண்டில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளால் சேதங்களை எதிர்கொண்ட ஒடிசா, கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.4,432 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 3,338.22 கோடி நிதிஉதவியை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு ரூ.1,029.39 கோடியும், பனிச்சரிவு மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு ரூ. 64.49 கோடியும் நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை  நிதியிலிருந்து உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து