எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இந்திய அணி இன்று முதல் டெஸ்ட்டில் விளையாட உள்ள நிலையில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்ட் மைதானத்தில் நாளை (22-ந் தேதி) தொடங்குகிறது.
20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது போல டெஸ்ட் தொடரிலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் வீரர்கள் சாதித்தனர். புஜாரா, விகாரி, ரகானே, ரோகித்சர்மா ஆகியோர் பேட்டிங்கிலும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்துவீச்சிலும் முத்திரை பதித்தனர்.
கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் விராட்கோலி அணிக்கு திரும்புகிறார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 2 சதம் அடித்து முத்திரை பதித்த அவர் டெஸ்ட் தொடரிலும் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
77 டெஸ்டில் 6613 ரன் குவித்துள்ள (131 இன்னிங்ஸ்) கோலி இந்த டெஸ்ட் தொடரில் பல்வேறு சாதனைகளை படைக்கும் ஆர்வத்துடன் இருக்கிறார்.
நாளைய டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வது கோலிக்கு சவாலானது. ஏனென்றால் அனைத்து வீரர்களும் நல்ல நிலையில் உள்ளனர்.
அகர்வாலும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். அதற்கு அடுத்த வரிசையில் புஜாரா, கோலி உள்ளனர். மிடில் ஆர்டரில் விகாரி, ரகானே, ரோகித்சர்மா ஆகியோரில் 2 பேர் மட்டுமே இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை தொடக்க வீரர்களில் மாற்றம் செய்யப்பட்டால் விகாரி தொடக்க வீரராகவும் ஆடலாம்.
இதேபோல விக்கெட் கீப்பர் தேர்வும், பந்து வீச்சாளர் தேர்வும் சிரமமானதே. அனுபவம் வாய்ந்த விர்த்திமான் சஹா, இளம் வீரர் ரிஷப்பந்த் இடையே போட்டி நிலவுகிறது. இதில் ரிஷப் பந்துக்கே அதிகமான வாய்ப்பு உள்ளது. அவர் 7-வது பேட்ஸ்மேனாக ஆடுவார்.
3 வேகப்பந்து வீரர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் இந்திய அணி களம் இறங்கும். பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெறுவார்கள். பயிற்சி ஆட்டத்தில் உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரும் போட்டியில் உள்ளார்.
சுழற்பந்து வீரர்களில் அஸ்வின் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவர்.
5-வது பந்து வீச்சாளர் தேவைப்பட்டால் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு ஒரு பேட்ஸ்மேன் கழற்றி விடப்படலாம். ஆடுகள தன்மை அறிந்து வீரர்கள் தேர்வு இருக்கும்.
இந்திய அணி 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்டில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சரித்திர சாதனை படைத்தது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் அக்டோபர் மாதம் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.
இந்திய மண்ணிலும், சொந்த மண்ணிலும் ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பழி தீர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும்.
நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், அகர்வால், புஜாரா, விகாரி, ரகானே, ரோகித்சர்மா, ரிஷப்பந்த், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அஸ்வின், பும்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், ஜடேஜா, விர்த்திமான் சஹா.
வெஸ்ட் இண்டீஸ்: ஹோல்டர் (கேப்டன்), ஹோப், ரோஸ்டன் சேஸ், டாரன் பிராவோ, ஹெட்மயா, பிராத்வெயிட், புரூகஸ், கேம்பபெல், கோர்ன்வால், டவுரிச், கேப்ரியல், கீமோ பவுல், கேமர்ரோச்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.