எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : பவானி ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு வேளாளர் பெண்கள் கல்லூரியின் பொன்விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஈரோடு, பெருந்துறை, காங்கேயம் சாலையில், திண்டல் சந்திப்பிலிருந்து வில்லரசம்பட்டி வழியாக ஊட்டி, கோத்தகிரி, சத்தி, ஈரோடு சாலையில் கண்ராத்தாங்குளம் அருகே சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்புச் சாலை பல்வழித் தடமாக ரூபாய் 22.50 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரைவில் பணி துவங்கப்படும்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி மற்றும் நாமக்கல் மாவட்டம் புள்ளிக்கல் பாலத்தை இணைக்கும் வகையில் காவேரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரைவில் பணி துவங்கப்படும்.
மாநிலச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோட்டிலிருந்து பவானி, மேட்டூர் வழியாக தொப்பூர் வரை உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணி விரைவில் தொடங்கப்படும்.
மேட்டுப்பாளையம் முதல் பவானி வரை ஏற்கனவே உள்ள இரு மாநில நெடுஞ்சாலைகளை இணைத்து மாவட்ட நெடுஞ்சாலை (15) மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை (82), சுமார் 98 கி.மீ. நீளத்திற்கு மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 77 கி.மீ. நீளமுள்ள பவானி முதல் கரூர் வரையுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையும் விரைவில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும். ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 67.76 கோடி மதிப்பீட்டில் உயர் சிகிச்சையுடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
ஈரோடு மாவட்ட மருத்துவமனை மூலம் ரூபாய் 84.50 கோடி மதிப்பீட்டில் 18 பணிகள் நடைபெற்று வருகின்றன. கணக்கம்பாளையம் கிராமத்தில் ரூபாய் 64 கோடி மதிப்பீட்டில் ஏரி அமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 500 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதியும், 1800 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் மறைமுக கிணறுகள் நீர் செறிவூட்டுவதன் மூலம் பயன்பெறும். பவானி வட்டம், ஜம்பைக்கு அருகில் பவானி ஆற்றின் குறுக்கே ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படவுள்ளது. ஈரோடு, ஊராட்சிக் கோட்டையிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு மாநகராட்சிக்கு வழங்குவதற்கான குடிநீர் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகளும் மூன்று அல்லது நான்கு மாத காலங்களுக்குள் நிறைவு பெற்று என்னால் துவக்கி வைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். மேலும், ஈரோடு மக்கள் வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
செல்வத்தில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம், அழியாச் செல்வம் கல்விச் செல்வம் ஒன்று தான். ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மற்றவர்கள் களவாடி விடுவார்கள். நம் உயிர் இருக்கின்றவரை ஒட்டி இருக்கின்ற ஒரே செல்வம் கல்விச் செல்வம் மட்டும் தான். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை வேளாளர் மகளிர் கல்லூரி உங்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றது. அதனை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன். பொருள் இருப்பவர்களுக்கு அந்த ஊரில் தான் செல்வாக்கு இருக்கும். ஆனால், கல்வி கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் பெருமை, சிறப்பு இருக்கும். அந்தச் சிறப்பை இந்தக் கல்லூரியின் மூலமாக நீங்கள் பெறவேண்டும்.
நாங்கள் படிக்கின்றபொழுது நடந்தே சென்று பள்ளியிலே படித்தோம். நான் படிக்கின்றபொழுது எங்கள் ஊரிலேயிருந்து ஆற்றைக் கடந்து பவானி வந்து நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆற்றிலே தண்ணீர் நிறைந்துவிட்டால் பரிசலில் சென்று படிக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு அப்படி அல்ல. ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கின்றது. குறித்த காலத்தில் நீங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியும், சிறந்த கல்வியை கற்க முடியும். அதுமட்டுமல்லாமல், இப்பொழுது அரசாங்கம் நிறைய சலுகைகளை கொடுக்கிறது.
யூடியூப், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய, விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளாகிய நீங்கள் மிகுந்த கவனமாகவும், தன்னம்பிக்கையோடும், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ வேண்டும். மாணவிகள் உயர்கல்வி படித்து, மென்மேலும் வளர்ந்து உங்கள் பெற்றோர்களுக்கும், தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தி, பொன்விழா கொண்டாடுகின்ற வேளாளர் கல்வி அறக்கட்டளை சிறந்து விளங்கி, நூற்றாண்டு விழா காணவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.