முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதிய செயலராக அஜய்குமார் நியமனம்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக அஜய்குமார் பல்லா பொறுப்பேற்க உள்ளார். அஜய்குமார் பல்லாவின் நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு அசாம் - மேகாலயா பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஜய்குமார் பல்லா உள்துறை அமைச்சகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். முன்னதாக கடந்த 2 ஆண்டுகளாக உள்துறை செயலராக ராஜீவ் கௌபா பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் உள்துறை செயலாளராக இருந்த ராஜீவ் கவ்பா கேபினட் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து புதிய உள்துறை செயலாளராக அடுத்த இரண்டு ஆண்டுகள் அஜய்குமார் பல்லா பதவி வகிப்பார். இதைத் தவிர பல்வேறு துறைகளுக்கான செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் துறைச் செயலராக அஜய் குமார், லோக்பால் செயலராக பிரிஜ் குமார் அகர்வால், பாதுகாப்பு உற்பத்தித் துறை செயலராக சுபாஷ் சந்திரா ஆகியோரையும் மத்திய அரசு நேற்று முன்தினம் நியமித்தது. இவர்களின் நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து