எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பேரையூர், கள்ளிக்குடி, திருமங்கலம் மற்றும் வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜசேகர் தலைமையில், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தலைவர் நிர்வாக இயக்குநர், வெளிநாட்டு மனிதவளக் கழகம் தர்மேந்திர பிரதாப் யாதவ்முன்னிலையில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப வியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 1812 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 70 இலட்சத்து 74 ஆயிரத்து 85 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் மாவட்;ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது குறித்தும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பது குறித்தும், மழைநீர் சேகரிப்பு குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மேலும் தனிநபர் கழிப்பறை வசதி, தெரு விளக்கு வசதிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள். மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை அனைவரும் பெறுவதற்கு ஏதுவாக இங்கு வருகை புரிந்துள்ள அனைவரும் இத்திட்டங்கள் குறித்தும், திட்டத்தின் பயன் குறித்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜசேகர் கூறுகையில்,
ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்படுகிறது. மேற்படி குறைதீர் நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்புத்திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.நகரங்களில் வார்டுகளிலும், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வு காண, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்பற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சார்ந்த ஒரு அலுவலர் குழு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும். மேற்குறிப்பிட்ட மனுக்களின் மீதான தீர்விற்குப் பின் செப்டம்பர் மாதத்தில் அமைச்சர் பெருமக்கள் தலைமையிலான வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும் என்றார்.
இந்த முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வட்டார வளர்ச்சித்துறைகள் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதி, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, பட்டா மாறுதல், மானிய விலையில் இடுபொருட்கள், பசுமைவீடுகள், இருபெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன்படி உசிலம்பட்டி வட்டத்தில் 313 பயனாளிகளுக்கு ரூ.27,99,288 மதிப்பிலும், பேரையூர் வட்;டத்தில் 162 பயனாளிகளுக்கு ரூ.18,96,000 மதிப்பிலும், தே.கல்லுப்படடியில் 245 பயனாளிகளுக்கு ரூ.26,11,411 மதிப்பிலும், கள்ளிக்குடி வட்டத்தில் 125 பயனாளிகளுக்கு 11,92,836 மதிப்பிலும், திருமங்கலம் வட்டத்தில் 328 பயனாளிகளுக்கு 43,04,250 மதிப்பிலும், வாடிப்பட்டி வட்டத்தில் 639 பயனாளிகளுக்கு 3,42,70,500 மதிப்பிலும் என மொத்தம் 1778 பயனாளிகளுக்கு ரூ.4,70,74,285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.நீதிபதி,கே.மாணிக்கம்,பெரியபுள்ளான் (எ) செல்வம்,எஸ்.எஸ்.சரவணன்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜோதி சர்மா, மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் பானுகோபன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முருகேசன்,பேரூராட்சி உதவி இயக்குநர் சேதுராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தனலெட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயா, மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம், உதவி இயக்குநர் (நிலஅளவைத்துறை) திரவியம், வாடிப்பட்டி வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார்,சுரேஷ்,கள்ளிக்குடி வட்டாட்சியர்கள் மூர்த்தி,ராமச்சந்திரன், பேரையூர் வட்டாட்சியர்கள் ஆனந்தி,சுரேந்திரன்,உசிலம்பட்டி வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ராமசாமி, உதவி இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பாண்டி, உசிலம்பட்டி வட்டாட்சியர்கள் செந்தாமரை, சிவராமன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.