முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவில் கிம் முன்னிலையில் நடந்த மிகப் பெரிய ஏவுகணை - லாஞ்சர் பரிசோதனை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

சியோல் : வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை நடத்தப்பட்டது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சர்வதேச எதிர்ப்புகளை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, வடகொரிய தலைவரிடம், அமெரிக்க அதிபர் டிரம்ப் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில், அணு ஆயுத பரிசோதனை கைவிடப்படும் என வடகொரியா அறிவித்தது. இதற்கிடையே, வடகொரியா மீண்டும் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது என தென்கொரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நாடு வெளியிட்ட செய்தியில்,

வடகொரியா, தெற்கு ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து நேற்று முன்தினம் காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது. எங்கள் ராணுவம், கூடுதலாக ஏவுகணைகள் ஏவப்படுகின்றனவா? என்று நிலைமையை கண்காணித்து வருகிறது என தெரிவித்தது. கடந்த ஜூலை 25-ம் தேதியில் இருந்து வடகொரியா மேற்கொள்ளும் 7-வது ஏவுகணை பரிசோதனை ஆகும். இந்நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில், ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை செலுத்தும் மிக பெரிய லாஞ்சரான சூப்பர் லார்ஜ் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி கொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புதிய மேம்பட்ட சாதனம் ஒரு மிக பெரிய ஆயுதமாக திகழும். எதிரி நாட்டு படைகளால் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற ராணுவ அச்சுறுத்தல் மற்றும் ஆதிக்க அழுத்தங்களை தயக்கமின்றி தடுக்கின்ற வகையில், ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடர வேண்டிய தேவை நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது என கிம் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து