முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை: கவர்னர் சத்யபால்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை. தட்டுப்பாடும் இல்லை. தகவல்தொடர்பு முடக்கத்தால், ஏராளமான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்று மாநில கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. அந்த மாநிலத்தில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் தவிர்க்க கடந்த 5-ம் தேதியில் இருந்து பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளை அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா? தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான சிரமும் இல்லை. தட்டுப்பாடும் இல்லை. அனைத்துப் பொருட்களும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபின் கடந்த 10 நாட்களில் மாநிலத்தில் எந்தவிதமான வன்முறையும் இல்லை. உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். செல்போன், தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தகவல் தொடர்பை தடுத்து வைத்திருப்பதால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் காஷ்மீரில் ஏதேனும் பிரச்சினை, கலவரம் என்றால் இந்நேரம் 50 உயிர்கள் பலியாகி இருக்கும். இப்போது எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. எங்களின் நோக்கம் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படக்கூடாது என்பதுதான். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிதான் என்னை காஷ்மீர் கவர்னராக பணியாற்றும் பொறுப்பை ஏற்கக் கூறினார். இது வரலாற்றுசிறப்பு மிக்க பணியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து