முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண் ஜெட்லியின் மறைவு - நாட்டிற்கு மாபெரும் இழப்பு - டெல்லியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் தங்கமணி உள்ளிட்டோரும் சென்றனர்.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு. அவர் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றியவர். அவரது குடும்பத்தாருக்கு அ.தி.மு.க. சார்பில் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து