முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஹூஸ்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அமெரிக்காவின் டெக்சாசில் மிட்லேண்டு பகுதி அருகே லாரி ஒன்றை 2 பேர் கொண்ட கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவர்கள் பொதுமக்கள் மீதும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 21 பேர் காயமடைந்தனர். பின்னர், அவர்கள் தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்தினார்.

இது பற்றிய தகவல் அறிந்து கடத்தல்காரர்களை பிடிக்க காவல் துறையினர் உடனடியாக சென்றனர். போலீசார் லாரியை மடக்கிய போது அதில் இருந்தவர் போலீசாரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார்  சினெர்ஜி என்ற திரையரங்கு அருகே கடத்தல்காரர்களில் ஒருவரை சுட்டு கொன்றனர். அந்த நபருக்கு 30 வயது இருக்கும் என போலீசார் கூறினர். இரண்டு வாகனங்களில் இருந்தபடியே, அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், சினெர்ஜி என்ற சினிமா தியேட்டரின் பார்க்கிங் பகுதி பரபரப்பானது.

சினிமாவில் நடப்பது போல இருந்தது என்று நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிபர் டிரம்பிற்கு இந்த சம்பவம் பற்றி விளக்கப்பட்டு உள்ளது. இது முட்டாள்தன மற்றும் கோழைத்தனம் நிறைந்த செயல். இந்த மன்னிக்க முடியாத செயலை செய்தவர்களுக்கு நீதி கிடைக்கும் என டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் கூறியுள்ளார். ஏற்கனவே, ஆகஸ்டு 4-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து