முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை திரும்புகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக முதல்வர் பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு நாளை 10-ம் தேதி அதிகாலை சென்னை திரும்புகிறார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி அரசுமுறை பயணமாக 28.8.2019 முதல் 9.9.2019 வரை 13 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது, இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலுள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.  அத்துடன் பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை பார்வையிட்டு, அதை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகளை பற்றியும் கேட்டறிந்தார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்று, தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்து, வெற்றிகரமாக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை 10-ம் தேதியன்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்புகிறார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து