முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவாலுக்காக காத்திருக்கிறார் எனக்கு பிடித்தமானவர் - ரிஷப் பந்த்துக்கு காம்பிர் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

எனக்கு பிடித்தமானவர் சவாலுக்காக காத்திருக்கிறார் என்று ரிஷப் பந்துக்கு கவுதம் காம்பிர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வகை போட்டிக்கு ரிஷப் பந்த்-ஐ விக்கெட் கீப்பராக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அவருக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், டி20 போட்டியில் தொடர்ந்து சோபிக்க முடியாமல் தவித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் 0, 4 மற்றும் 65 (அவுட்இல்லை) ரன்களே அடித்தார்.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தரம்சாலாவில் தொடங்குவதாக இருந்தது.

இந்நிலையில், எனக்கு பிடித்தமானவர் (சஞ்சு சாம்சன்) உங்களுக்கு போட்டியாக உள்ளார் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் ரிஷப் பந்த் எப்போதும் சிறப்பாக உற்சாகத்துடன் விளையாடக் கூடியவர். ஆனால், எனக்கு பிடித்தவராக சஞ்சு சாம்சன் அவருக்கு போட்டியான பின்னால் நின்று கொண்டிருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். சாம்சன் ரிஷப் பந்த்துக்கு மிகவும் சவாலாக திகழ்ந்து வருகிறார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து