முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், டிரம்ப் கலந்து கொள்கிறார். 50 ஆயிரம் அமெரிக்க இந்தியர்களிடையே இருவரும் கூட்டாக பேசுகிறார்கள்.   

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி, வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. டெக்சாஸ் இந்தியா கூட்டமைப்பு என்ற புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.  

அங்குள்ள என்.ஆர்.ஜி. மைதானத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் பங்கேற்க இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் ஆன பிறகு, அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேசும் 3-வது பிரமாண்ட நிகழ்ச்சி இதுவாகும். இதற்கு முன்பு, 2014-ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாடிசன் சதுக்கத்திலும், 2016-ம் ஆண்டு சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் அவர் பேசிய கூட்டங்கள், மிகவும் வரவேற்பை பெற்றன. அந்த கூட்டங்களில் தலா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், மோடி பங்கேற்கும் ஹூஸ்டன் நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் பங்கேற்கிறார். இதை வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புத்துறை மந்திரி ஸ்டெபானி கிரிஷம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியும், ஜனாதிபதி டிரம்பும் கூட்டாக பங்கேற்கும் கூட்டம், இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த உறவை மீண்டும் உறுதிப்படுத்த வாய்ப்பாக அமையும். தங்களின் எரிசக்தி மற்றும் வர்த்தக உறவை வலுவாக்குவதற்கான வழிகளை ஆராய்வதற்கான வாய்ப்பாகவும் அமையும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து