முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி தொடங்க உள்ளது.

இலங்கையில் வரும் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான எஸ்.எல்.பி.பி. கட்சி கோத்தபயே ராஜபக்சே தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளது. அதேபோல், அனுரா குமாரா திஷனாயகேவும் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் போட்டியிட தயராக உள்ளார். இலங்கையின் பிற பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முண்னணி மற்றும் எஸ்.எல்.எப்.பி. ஆகிய கட்சிகள் இன்னும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து