முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குச் சீட்டு முறையை திரும்ப கொண்டு வர சாத்தியமே இல்லை - தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வாக்குச் சீட்டு நடைமுறையை திரும்பக் கொண்டு வருவதற்கு சாத்தியமே இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு இந்த ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, முதற்கட்டமாக மகராஷ்டிரா மாநிலத் தேர்தல் அதிகாரி, அம்மாநில போலீசார், வருமான வரித்துறையினர், கலால் துறையினருடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா,

வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் அதற்கு சாத்தியமே இல்லை. வாக்குச்சீட்டு முறை என்பது வரலாறாகி விட்டது. அதைத் திரும்பக் கொண்டு வருவதற்கு சாத்தியமே இல்லை. கடிகாரம், வாகனம் போன்ற மற்ற எந்திரங்களை போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் கோளாறு ஏற்படும் எனக் கூறிய அரோரா, ஆனால் ஹேக் செய்வது இயலாத காரியம் என விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து