எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாக்களில் சிறப்புடன் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்புமக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா திட்டத்தின் மூலம் பயனாளிகள் 971 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் தாலுகாக்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நேற்று வெகு சிறப்புடன் நடைபெற்றது.அதன்படி திருமங்கலம் தாலுகாவில் அ.கொக்குளம் கிராமம்,பேரையூர் தாலுகாவில் பேரையூர் பேரூர்,கள்ளிக்குடி தாலுகா குராயூர் கிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் டி.எஸ்.ராஜசேகர் தலைமை வகித்தார்.மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி,கள்ளிக்குடி வட்டாட்சியர் மூர்த்தி,பேரையூர் வட்டாட்சியர் ஆனந்தி ஆகியோர் வரவேற்றனர்.
ஏழை,எளியோர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அம்மா திட்டத்தின் கீழ் திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் பேரையூர் வட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் 971 பேருக்கு முதியோர் உதவித் தொகை,வீட்டுமனை பட்டா,பட்டா மாறுதல் உட்பிரிவு,ஆதரவற்ற விதவைச் சான்று,மினிகிட் துவரை,முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை உள்ளிட்ட ரூ.2கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.பின்னர் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பெற்றுக் கொண்டு அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக அ.கொக்குளம்,காரைக்கேணி, குராயூர் ஆகிய கிராமங்களுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பூரணகும்ப மரியாதை செய்தும்,வெற்றி குலவையுடன் ஆரத்தி எடுத்தும் அன்புடன் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழக முதலiமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது.இதற்காக தமிழகம் முழுவதிலும் அலுவலர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதில் 5லட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதே போல் 5ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபணை இல்லாத ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருந்தால் அவர்களுக்கு பட்டா வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் ஆட்சேபணை உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு மாற்று இடங்கள் வழங்கிடவும்,இடம் இல்லையென்றால் தனியார் இடத்தினை கொள்முதல் செய்து அவர்களுக்கு இடம் வழங்கப்படவுள்ளது.வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.தென்மேற்கு பருவமழைகாலம் இன்னும் முடியவில்லை.காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் போது மழை பொழிவு அதிகமாக இருக்கும்.தற்போது பெய்கிற மழை தற்காலிகமாகத்தான் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை என்பது ஆந்திரா,கர்நாடகா,கேரளா ஆகிய பகுதிகளில் தொடர்கனமழையாக இருக்கும்.வடகிழக்கு பருவமழையின் போது தான் நமக்கு தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக,சூறாவளியாக உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.ஆதலால் அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மாதங்களில் ஏற்படும் மழைப்பொழிவு 48சதவீதம் நமக்கு குடிநீருக்காகவும்,விவசாயத்திற்காகவும் பயன்படுகிறது. அதற்காகத்தான் ரூ.700கோடிக்கு மேல் குடிமராமத்து திட்டத்திற்காக முதலமைச்சர் நிதி வழங்கியுள்ளார்.அதே போல் ஊராட்சி உள்ளாட்சி மற்றும் நகராட்சிளில் உள்ள கண்மாய்களை தூர்வாருவதற்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.288கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக பொதுப்பணித்துறையில் எங்கெல்லாம் பைப் கல்வெர்ட் உள்ளதோ அதை பாக்ஸ் கல்வெர்ட் ஆக மாற்றிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதன பேரில் 32வருவாய் மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் 121 நிவாரண பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்கள் இல்லாத பகுதிகளிலும் பள்ளி,திருமண மண்டபம் ஆகியவை அடையாளம் காணப்பட்டு வருகிறது.மழை காலங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான தங்கும் இடம்,உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்து தரப்படும்.தமிழகம் முழுவதும் 4199 பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அதை வரைமுறைப்படுத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.கடலோர மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவைப் பெற்று நேரடி ஆய்வுகள் செய்து வருகிறோம். வருகிற வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்திடும் மழைநீரை சேமித்து வைக்கும் அளவிற்கு அனைத்து ஆயத்தப் பணிகளையும் தயார் நிலையில் வைத்துளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த முகாம்களில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஜெயராமன்,வேலுச்சாமி,முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,போத்திராஜா,மாவட்ட துணைச்செயலாளர் பஞ்சம்மாள்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைச் சேர்மன் சதீஸ்சண்முகம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் யூனியன் துணை சேர்மன்பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணி,தர்மர்,பாஸ்கரன்,ராமகிருஷ்ணன், செல்வமணி செல்லச்சாமி,கல்யாணி,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம்,முன்னாள் துணை சேர்மன் கண்ணன்,அவை தலைவர் வேல்பாண்டி,அம்மா பேரவை வேல்ராமகிருஷ்ணன், சின்னஇருளப்பன்,முருகன்,அழகர்,அன்னமுத்து,வில்லூர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அன்னக்கொடி,சுகுமார்,சாமிநாதன்,கட்டாரி வேல்முருகன்,சிவன்காளை,காமதேவன்,சிங்கராஜபாண்டியன்,கொடிவைரன்,முத்து,கட்சி வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.