எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்டகாங் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெள்ளியன்று நடைபெற்ற டி20 போட்டியே தன் இறுதிப் போட்டி என்று ஜிம்பாப்வே வீரர் மசகாட்ஸா அறிவிக்கும் போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் கடைசி போட்டியில் அவர் இறங்கும் போது ஆப்கான், ஜிம்பாப்வே வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்திய காட்சி நெகிழ்ச்சியாக அமைந்தது. மசகாட்ஸா தன் கடைசி போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். இதன் மூலம் ஆப்கானை முதல் முறையாக ஜிம்பாப்வே அணி டி20 போட்டியில் வீழ்த்திய சாதனையைப் புரிந்தது.
36 வயதாகும் மசகாட்ஸா, தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் ஆட்டத்தை நேற்று முன்தினம் முடிக்கும் இன்னிங்சில் 5 சிக்சர்களையும் 4 பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். அணியை கடைசி போட்டியில் வெற்றிக்கு இட்டுச் சென்றது சூப்பர் ஸ்பெஷல்தான் என்றார். மசகாட்ஸா. 2001-ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் நுழைந்த மசகாட்ஸா அந்த அணியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த ஒரு வீரர்.
ஆட்டம் தொடங்கும் முன் அணி வீரர்களுடன் பேசும் போது உணர்ச்சிவயப்பட்டேன். கொஞ்சம் அழுதும் விட்டேன். நான் பொதுவாக உணர்வுகளை வெளிப்படுத்தாதவன் ஆனால் இந்தத் தருணம் என்னிடம் சில உணர்ச்சிகளை வெளிக்கொணர்ந்தது. என்னால் 3 வாக்கியங்களைக் கூட சரியாகப் பேச முடியாத அளவுக்கு உணர்ச்சிவயப்பட்டேன். மசகாட்ஸா தன் முதல் டெஸ்ட் சதத்தை மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக எடுத்த போது இளம் வயதில் சதம் எடுத்த உலக சாதனையை புரிந்தார். அப்போது அவருக்கு 17 வயது 254 நாட்கள் ஆகியிருந்தன. ஆனால் இவரது உலக சாதனை 3 மாதங்களே தாக்குப் பிடித்தது காரணம் வங்கதேச இளம் வீரர் முகமது அஷ்ரபுல் இவர் சாதனையை முறியடித்தார்.
ஜிம்பாப்வே அணியின் முதல் தர கிரிக்கெட்டில் சதம் எடுத்த முதல் கறுப்பின வீரர் என்ற சாதனைக்கும் மசகாட்சா சொந்தக்காரர். ஆனால் அதன் பிறகு படிப்புக்காக 3 ஆண்டு காலம் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். மீண்டும் வந்த போது ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கும் வாரியத்துக்கும் பிரச்சினைகள் மூண்டிருந்தன. இது இவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்தது. இதனால் தன் 2-வது டெஸ்ட் சதத்தை எடுக்க மசகாட்ஸா 2011 வரை காத்திருக்க நேரிட்டது. அதாவது ஜிம்பாப்வே 5 ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்து மீண்டும் வந்த போதுதான் இவர் வங்கதேசத்துக்கு எதிராக தன் 2-வது டெஸ்ட் சதத்தை எடுக்க முடிந்தது.
மசகாட்ஸா 39 டெஸ்ட் போட்டிகள், 209 ஒருநாள் சர்வதேச போட்டிகள் 66 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் 2223 ரன்களை 30 ரன்கள் சராசரியுடன் 5 சதங்கள் 8 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 158. 209 ஒருநாள் போட்டிகளில் 5,658 ரன்களை 5 சதங்கள் 34 அரைசதங்களுடன் 86 சிக்சர்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 178 நாட் அவுட். அதே போல் 66 டி20 சர்வதேச போட்டிகளில் 1662 ரன்களை 11 அரைசதங்களுடன் அதிகபட்ச 93 ரன்களுடன் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 117.20.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.