முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியானார்கள்.  

பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சிலாஸ் மாவட்டத்தில் சென்றபோது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்கிருந்த மலையில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும்15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து நடந்த இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து