முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள்போட்டியை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை முன்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
     தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் நாளினை சிறப்பாக கொண்டாடும்; வகையில்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும்  பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சைக்கிள் போட்டிகள்  நடத்தப்பட்டு  வருகின்றன. அதனடிப்படையில் ராமநாதபுரம், பட்டிணம்காத்தான் கிழக்குகடற்கரை சாலை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியினை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 இவ்விளையாட்டு போட்டியானது 13 வயதிற்குட்பட்டோர் (10கி.மீ), 15 வயதிற்குட்பட்டோர் (15கி.மீ), மற்றும் 17 வயதிற்குட்பட்டோர் (20கி.மீ) என 3 பிரிவுகளாக, மாணவர், மாணவியர் என இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன.  இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.லயோலா இக்னேஷியஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.செந்தில்குமார், மாவட்ட விரைவு மிதிவண்டி கழக தலைவர் பொறியாளர் ஆர்.பால்பாண்டியன், மாநில துணைத் தலைவர்  ஆர்.ஜான்சன் கலைச்செல்வன், ராமநாதபுரம் வட்டாட்சியர் கி.தமிழ்செல்வி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து