முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் முதல் பெண்கள் தபால் அலுவலம் - மத்திய அமைச்சர் ரவிசங்கர் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : பீகார் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் பெண்கள் தபால் அலுவலத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்.

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் முதல் பெண்கள் தபால் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மாநில அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த தபால் அலுவலகத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் முழுவதும் மகளிர் மட்டுமே செயல்படுவர். தலைமை அதிகாரி முதல் தபால்களை வினியோகம் செய்பவர்கள் வரை மகளிர் மட்டுமே பணியில் ஈடுபடுவர். மாநிலஅரசு பணி தேர்வாணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை இந்த மகளிர் தபால் நிலையம் செய்யும் என தெரிவித்தார். இந்தியாவின் முதல் பெண்கள் தபால் நிலையம் புதுடெல்லியில் கடந்த 2013, மார்ச்சில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து