முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 7 பேர் கொண்ட கும்பல் கைது

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

  திண்டுக்கல், -திண்டுக்கல்லில் பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய நெல்லையை சேர்ந்த 7 பேர் கொண்ட ரவுடிக்கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் தாமரைப்பாடி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ரெயில்வே பாலம் அருகே சந்தேகப்படும்படியாக சிலர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை துரத்திச் சென்ற போது தப்பியோட முயன்றனர். இருந்த போதும் போலீசார் அவர்களை துரத்திச் சென்று பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். பின்னர் அவர்களை வடமதுரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். இதில் அவர்கள் அனைவரும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் திண்டுக்ல்லில் நடந்து வரும் ஒரு வழக்கு விசாரணைக்காக இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர். அதற்கு பணம் தேவைப்படுவதால் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க முயன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் அரிவாள்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த கண்ணபிரான்(41), தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(30), சேரன்மகாதேவியைச் சேர்ந்த சிவா(25), ஆலங்குளத்தைச் சேர்ந்த கணேசமுத்து(27), நெல்லை சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்(31), பெருமாள்புரம் ரெட்டியபட்டியைச் சேர்ந்த ரமேஷ்(23), மேலப்பாளையம் நாகம்மாள்புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன்(22) என தெரியவந்தது. இவர்கள் மீது கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் இவர்களை கைது செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து