முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை மீண்டும் ஏற்றம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்தது

புதன்கிழமை, 25 செப்டம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 224 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 28 உயர்ந்து ரூ. 3,642-க்கும், சவரனுக்கு ரூ. 29,136-க்கும் விற்பனையானது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.52-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக் காலமாக உயர்ந்தது. இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கிடையே கடந்த 4-ம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரத்தைத் தாண்டியது. இரு வாரங்கள் முன்பு வரை, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து