முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தட்கலில் விவசாய மின் இணைப்புக்கு 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் தங்கமணி தகவல்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

நாமக்கல் : தட்கலில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு வரும் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.   

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

தட்கலில் விவசாய மின் இணைப்பு பெற அக்டோபர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.   டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கு செப்டம்பர் 30-ம் தேதி டெண்டர் விடப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்புகள், கடந்த ஆண்டுகளில் மீதமுள்ள ஆயிரம் இணைப்புகள் என மொத்தம் 11 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி சட்டசபையில் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து