முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை சீர்குலைக்க, தீவிரவாதத்தை கருவியாக பயன்படுத்துகிறது பாகிஸ்தான் - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்க பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்துகிறது பாகிஸ்தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலில் மேற்கு கடற்படைப் பிரிவு வீரர்களுடன் பயணித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முழுவதும் அந்தக் கப்பலில் தங்கி இருந்த ராஜ்நாத் சிங், வீரர்களின் பயிற்சியை பார்வையிட்டார். நேற்று அதிகாலை வீரர்களுடன் சேர்ந்து அவர் யோகா செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  ராஜ்நாத் சிங், யோகாவை இந்தியா மட்டும் அல்லாது, உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது. யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த புகழ் பிரதமர் மோடியையே சாரும் என்று தெரிவித்தார்.

அப்போது கடல் வழி தீவிரவாத தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கான பாதுகாப்பை பெற்றிருக்கும் என்ற போதிலும், தீவிரவாத தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

2008-ம் ஆண்டில் நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது. ஒரு முறை தவறு நிகழ்ந்து விட்டதால், கண்டிப்பாக மீண்டும் அந்த தவறு நடக்கக் கூடாது. கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல் நீடிக்கிறது. இந்தியாவை சீர்குலைக்க, தீவிரவாதத்தை ஒரு கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து