முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்தது. 

வெங்காயத்தின் விலை கடந்த வாரம் அதிகரித்தது. ஒரு கிலோ வெங்காயம் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினர்.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 29 ரூபாய்க்கு விற்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இந்நிலையில், உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து