எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரையில் 10 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் சேர்ந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சங்கிலி தொடர்போல சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகனான உதித்சூர்யா மும்பையில் உள்ள தேர்வு மையத்தில் தனக்கு பதில் வேறு ஒரு நபரை தேர்வு எழுத வைத்து வெற்றி பெற்று மோசடியாக தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சம்பவம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது.
இதுபற்றி தெரிய வந்ததும் தப்பி ஓடிய உதித்சூர்யா தந்தையுடன் திருப்பதியில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 2 பேரிடமும் நடத்திய விசாரணையில் நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மாணவர் உதித்சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் அளித்த வாக்குமூலத்தில் நீட் தேர்வில் மேலும் 4 மாணவர்கள் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததாக தெரிவித்தனர். இதன் அடிப்படையில் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவின், அவரது தந்தை சரவணன், குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல், அவரது தந்தை ஜெகதீஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்போரூர் சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தொடர்புடைய 5-வது மாணவரான வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவது தெரிய வந்தது.
அவரை தேடி சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மொரீசியஸ் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இர்பானின் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இர்பானின் தந்தையும், டாக்டருமான முகமது ஷபி கைது செய்யப்பட்டார். அவரை வைத்து இர்பானை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி முகமது ஷபியை செல்போனில் இர்பானிடம் பேச வைத்தனர்.
அப்போது மாணவர் இர்பான் சேலத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் தீவட்டிபட்டி அருகில் டேனீஸ்பேட்டையில் அவரை கைது செய்தனர்.
பின்னர் மாணவர் இர்பானும், அவரது தந்தை முகமது ஷபியும் தேனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆள் மாறாட்டம் தொடர்பாக இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆள் மாறாட்டத்துக்காக மாணவர் உதித் சூர்யா ரூ.20 லட்சம் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார். மற்ற மாணவர்களும் இதே போன்று தரகர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை வழங்கியதாக தெரிவித்து இருந்தனர்.
இவர்களைப்போல இர்பானும் பணம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இதுவரையில் 10 பேர் பிடிபட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடியில் பயிற்சி மையங்கள் மூலமாகவே தரகர்கள் ஆள் மாறாட்டத்துக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஜோசப் போலீசின் பிடியில் சிக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் கைதானது பற்றி இதுவரை போலீசார் எந்த தகவலையும் வெளியிடாமலேயே உள்ளனர்.
அவரை போன்று மேலும் பல தரகர்கள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ரசீத் என்ற இன்னொரு தரகரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரும் ஆள் மாறாட்டத்துக்கு பெரிதும் உதவி செய்து உள்ளார். அவரை பிடிக்கவும் வலை விரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாலாஜி மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக்குமார், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி முதல்வர் சுந்தரம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சத்யசாய் மருத்துவ கல்லூரி முதல்வர் பிரேம்நாத் ஆகியோரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பி தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்து இருந்தனர். இதனை ஏற்று 3 பேரும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
தர்மபுரி மருத்துவக் கல்லூரி முதல்வரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீட் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி