முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : பீகாரில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 29 பேர் பலியாகி உள்ளனர்.

பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாட்னா நகரின் எஸ்.கே. பூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழைக்கு இதுவரை பொதுமக்களில் 29 பேர் பலியாகி உள்ளனர் என்று பீகார் பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.

வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று வழங்குவதற்காக 2 ஹெலிகாப்டர்களை உதவிக்கு அனுப்பி வைக்கும்படி இந்திய விமான படையிடம் பீகார் அரசு கேட்டு கொண்டுள்ளது. பீகாரில் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. வீடுகள், கட்டிடங்களை சுற்றி நீர் தேங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள நீரானது இடுப்பளவு வரை சூழ்ந்துள்ளது. பேரிடர் மேலாண் கழக குழுவினர் படகுகளில் சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு பலரை மீட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து