முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 2-வது வாரம் தொடங்க வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : கேரளாவில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 2-வது வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கொச்சி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ மழை மூலம் போதுமான அளவு மழை பொழிவு கேரளாவுக்கு கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் மழை தீவிரம் அடைந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிக மழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினத்துடன் (30-ம் தேதி) தென்மேற்கு பருவமழை கேரளாவில் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது கேரளாவில் இயல்பை காட்டிலும் 14 சதவீதம் அதிக மழை பெய்து உள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை முடிவடைந்த மறுநாளே வடகிழக்கு பருவ மழை கேரளாவில் தொடங்கி விடும். அதன்படி நேற்று (1-ந்தேதி) வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி இந்த மாதம் 2-வது வாரம்தான் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி மனோஜ் இந்த தகவலை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து