முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு இந்திய வீரர் படுகாயம்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா, பூஞ்ச் மாவட்டங்களில் பாகிஸ்தான் படையினர் விடிய, விடிய நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆண்டிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இது வரை 2050-க்கும் அதிகமான முறை பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் நமது தரப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மற்றும் கத்துவா மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய கண்கானிப்பு நிலைகளின் மீதும் அருகாமையில் உள்ள கிராமங்கள் மீதும் நேற்று முன்தினம் பின்னிரவில் இருந்து நேற்று காலை வரை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய கண்காணிப்பு நிலைகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அபிஷேக் ராய் என்பவர் படுகாயமடைந்தார். தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி தந்து வருவதாகவும் ஜம்முவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து