முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: வீட்டில் தயாரித்த உணவு வழங்க அனுமதி கோரி சிதம்பரம் மனு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நீதிமன்ற காவலில் உள்ள ப.சிதம்பரம் சிறை உணவுக்கு பதிலாக வீட்டில் தயாரித்த உணவு வழங்க அனுமதிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார். இதையடுத்து அவர் வரும் 3-ம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் சி.பி.ஐ.யின் கைது நடவடிக்கைக்கு எதிராக ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீது டெல்லி ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

5 நாட்களாக விசாரிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 27-ம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில், டெல்லி ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.

அதில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் தற்போதைய எம்.பி. என்பதை அடிப்படையாக கொண்டு அவருக்கு எந்த தனி சலுகைகளையும் நீதிமன்றத்தால் வழங்க முடியாது. இதில் அவர் வெளியே இருந்தால் வழக்கு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் அழிக்கக் கூடும் என்ற சி.பி.ஐ. தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் ப.சிதம்பரத்தின் காவல் நாளை 3-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள ப.சிதம்பரம் சிறை உணவுக்கு பதிலாக வீட்டில் தயாரித்த உணவு அனுமதிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டில் மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து