முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

150-வது பிறந்த நாள்: டெல்லி காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி, சோனியா மரியாதை

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான நேற்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு வந்த பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திலும் பங்கேற்ற பிரதமர் மோடி கூட்டம் முடியும் வரை இருந்தார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், பாபுவுக்கு எனது அன்பார்ந்த அஞ்சலி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில் மனிதகுலத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அவரின் கனவுகளை நனவாக்கவும், இந்த பூமியை சிறந்ததாக மாற்றவும் நாங்கள் உறுதி ஏற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் காந்தியின் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை  செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் காந்தியின் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில்,  நம்முடைய அன்றாட வாழ்க்கையில் காந்தியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி மாற்றம் காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து