எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மூலம் கொள்ளையர்கள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் தனியார் ஓட்டலில் தகவல் தொழில் நுட்பம் மூலம் மக்களை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
நமது தாத்தா, பாட்டி காலத்தில் தகவல் பரிமாற வேண்டுமென்றால் தபால் அட்டையில் செய்தி எழுதி அனுப்பி அது சம்மந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க 15 நாட்கள் வரை ஆகும். ஆனால் தற்போது அமெரிக்காவில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்தால் அடுத்த நொடியே வீடியோவுடன் நமக்கு தெரிய வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள கால அவகாசத்தில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் என மனிதர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வீட்டில் இருந்தவாறே அரசு சலுகைகள், சான்றிதழ் பெற வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர். அந்த வகையில் தற்போது அதனை மக்கள் வீட்டிலிருந்தவாறே பெற தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துள்ளது.
தமிழக அரசு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மனை பட்டா, பட்டா மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி வருகிறது . அதன்படி ஆன்லைன் மூலம் 2 கோடி பேர் சான்றிதழ்களை தமிழகத்தில் பெற்றுள்ளனர். அதே போன்று TNSMRT என்ற ஆப்பை அறிமுகப்படுத்திய பெருமை தமிழக அரசின் ஓய்வு பெற்ற வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலை சாரும். இந்த ஆப் தற்போது ஐ.நா.சபை கூட்டத்தில் கூட பாராட்டு பெறக் கூடிய அளவிற்கு சாதனை படைத்துள்ளது. உலகில் உள்ள 130 கோடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால் அது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மட்டுமே சாத்தியம்.
கடந்த காலங்களில் பள்ளிகளில் மாணவர் பதிவேடு எடுக்க சுமார் 15 நிமிடங்கள் வரை தேவைப்படும். தற்போது மாணவர்களின் முகத்தை காட்டினாலே அரசு பள்ளிகளில் வருகை பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் கிடைக்கின்றன. அந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் இந்த அளவிற்கு தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு இன்றைய தலைமுறையினரே காரணம், ஆகவே அவர்களை பாராட்ட வேண்டியது அரசின் கடமை.
கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு ஒரு குற்றம் நடந்தால் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள ரைட்டர் மேலதிகார்களுக்கு அய்யா என்று விளித்தபடி கடிதம் எழுதுவார். அந்த கடிதம் குறிப்பிட்ட மேலதிகாரிகளுக்கு கிடைப்பதற்குள் அந்த கொள்ளையர்கள் வடமாநிலத்திற்கு தப்பி ஓடி விடுவார்கள். ஆனால் இப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஒரு குற்றம் நடந்ததும் அங்கு எப்படி கொள்ளை நடந்தது, ஓட்டை போடப்பட்டது எப்படி, கொள்ளையர்கள் நுழைந்தது எவ்வாறு என்பது பற்றி வாட்ஸ் அப் மூலம் உடனடியாக வந்து விடுகிறது. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் மூலம் கொள்ளையர்கள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
தகவல் தொழில் நுட்பத்துறைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. சுகாதாரத்துறை, சமூகநலத்துறை, காவல்துறை என்று அனைத்து துறைகளுக்கும் எங்கள் முகங்கள் இருக்கின்றன. எங்களை போன்ற அரசியல் வாதிகளுக்கும் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மிகப்பெரிய வரபிரசாதமாகும். அமைச்சர் எங்கே இருக்கிறார் என்பதை செல்போன் மூலம் உடனடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நான் உள்ளிட்ட அமைச்சர்களும் அமெரிக்காவுக்கு சென்றிருந்தோம். நாங்கள் அமெரிக்காவின் கலிப்போர்னியாவில் இருந்த போது பல்வேறு தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் உலகம் மூலம் சென்றடைந்தது கலிபோர்னியாவில் போக்குவரத்து விவரங்களை கூகுள் மூலம் அறிய முடிகிறது. இந்த பக்கம் வாகனங்களை இயக்கி சிக்கி கொள்ளாதீர்கள். அங்கு போலீசார் இருக்கிறார்கள் என்று கூகுள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவிலும் நம்ம ஊர் இட்லியும், சாம்பாரும் கிடைக்கிறது. கலிபோர்னியாவில் தமிழர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அங்கு முக்கியமான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரம் பேரில் ஐநூறு பேர் நம்முடைய தமிழர்கள் என்று நமக்கு கிடைத்த பெருமையாகும். இன்றைக்கு மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கீழடி குறித்த ஆய்வு தகவல்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் நமக்கு உடனடியாக வந்து சேர்கிறது.
தற்போது மனிதன் அனைத்தும் எளிமையாகவும், விரைவாகவும், உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறான். மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் அரசு உள்ளது. ஆகவே தகவல் தொழில் நுட்பத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி மீண்டும் செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அந்த வகையில் தமிழக அரசு தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் மூலம் தொடர்ந்து தமிழகம் தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பல்வேறு துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த சேவையாற்றிய அரசு முதன்மை செயலாளர்கள் ககன்தீப்பேடி ( வேளாண்மைத்துறை) மதுமது( சமூகநலத்துறை) கூடுதல் டிஜிபி கந்தசாமி ( காவல்துறை) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் உதயகுமார் பாராட்டினார்.
இந்திய தொழில்வர்த்தக மேம்பாட்டுக்கழகத்தின் தலைவர் கவிதா தத் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு, மின்னணு நிர்வாக ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா, எல்காட் மேலாண் இயக்குனர் விஜயகுமார், ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த