முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் இந்த கல்வியாண்டு முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவில் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், இந்த கல்வியாண்டு முதலே 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய தொழில்நுட்ப குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கற்று கொடுக்கப்பட்டவற்றை மாணவர்கள் எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், எதையும் கற்றுக் கொள்ளாமல் மாணவர்கள் தேர்ச்சி பெறக் கூடாது என்பதற்காகவும் இந்த முறையை அறிமுகம் செய்வதாக அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, 9-ம் வகுப்பு வரை தோல்வி இல்லை என்கின்ற போது கல்வியின் தரம் ஒருவேளை பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 7-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாவட்ட அளவில் விடைத்தாள்கள் திருத்தப்படும். ஒருவேளை இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் அடுத்த ஆண்டு நிச்சயம் அமல்படுத்தப்படும். மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை தீவிரமாக கருத்தில் கொள்ள பொதுத்தேர்வு வகை செய்யும் என்று கூறினார். அரசின் இந்த நடவடிக்கையால் கர்நாடகாவில் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தாலும் அடுத்த வகுப்புக்கு முன்னேற தடை இல்லை என்ற விதி கைவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து