எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
களக்காடு : சென்னையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை புறக்கணித்து உள்ளுர் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என்று நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காளக்காடு பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். நேற்று களக்காடு பல்வேறு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு அமைச்சர் வாக்கு சேகரித்தார். பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும் போது,
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அ.திமுக வேட்பாளருக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. நாங்குநேரியில் கஷ்டப்பட்டு உழைத்த நபருக்கு அ.தி.மு.க.வில் சீட் வழங்கப்பட்டுள்ளது. கட்சியை நம்பி, வாக்காளர்களை நம்பி அ.தி.மு.க. வேட்பாளர் களத்தில் நிற்கிறார். ஆனால் பணத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகின்றார். பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பிறந்து சென்னையில் குடியிருந்து வரும் நபருக்கு நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சீட் கொடுத்துள்ளது. நாங்குநேரி தொகுதிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது..வெளியூர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி நாங்குநேரியில் களத்தில் இறங்கியுள்ளது. எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை தருகிறேன் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பேசியுள்ளார். அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை நம்பி, எடப்பாடியார் நல்லாட்சியை அங்கிகரிக்கும் வகையில் வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உறவினர் என்ற காரணத்துக்காக காங்கிரல் வேட்பாளருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. உள்ளுர் தொகுதியில் வசிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம் என்றும் வெளியூர் வேட்பாளரை தேடி செல்ல முடியாது என்றும் வாக்காளர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். களக்காடு பகுதியில் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகளை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் நாங்குநேரி தொகுதியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்யவில்லை. தமிழகம் முழுவதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லா மாவட்டத்திற்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்த ஒரே முதல்வர் எடப்பாடியார் மட்டுமே. ஒவ்வொரு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று அரசின் திட்டங்களை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தொகுதிக்குள் விடாத நிலை இருந்தது. தற்போது அமைச்சர்கள் தொகுதியில் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு கேட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அப்போதைய தி.மு.க. அமைச்சர் கண்டும் காணாததுபோல் சென்றதை தமிழக மக்கள் அறிவார்கள். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவரது தலைவர் பதவியை ஆறு மாதங்கள் தக்க வைக்கும் நோக்கில் அமைச்சர்கள் மீது வீண்பழி சுமத்தி வருகின்றார். நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் களக்காடு அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.