முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் உள்துறை செயலாளர் உத்தரவு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சப் டிவிஷனில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றும் தீபா சத்யன் சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு ஏ.எஸ்.பி. பெத்துவிஜயன் எஸ்.பி.யாகப் பதவி உயர்வு பெற்று சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு நிரஞ்சன் மார்டி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து