முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளிமண்டத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை, தேனி திண்டுக்கல்லில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 10 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் 8 செ.மீட்டர் மழையும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் 6 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் சேலம் சங்கரி துர்கா, தேனி மாவட்டம் பெரியகுளம், நீலகிரி நடுவட்டம் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5 செ.மீட்டர் பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து