முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே இந்திய - சீன போர் கப்பல்கள் ரோந்து

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

காஞ்சிபுரம்  : மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே இந்திய - சீன போர் கப்பல்கள் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் சீன நாட்டு தலைவர்கள் சந்தித்து கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக மாமல்லபுரத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடற்கரை கோவில் அருகே கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் ஒன்றாக நிகழ்ச்சிகளை பார்வையிடவுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பு கருதி இரு நாட்டு கடற்படைகளின் 4 போர் கப்பல்கள் மாமல்லபுரம் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. நான்கு நாட்டிகல் மைல் தொலைவிற்கு ஒரு போர் கப்பல் என 10 நாட்டிகல் மைல் தொலைவை கண்காணிக்கும் வகையில் இரு நாடுகளும் தலா 2 போர் கப்பல்களை மாமல்லபுரம் கடலில் நிறுத்தி வைத்துள்ளனர்.

அதிவிரைவு படகுகளும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கடற்கரை கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம், சூலெறிக்காடு, கோவளம், நிம்மேலி, திருவுடந்தி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஓ.எம்.ஆர்-ல் கேளம்பாக்கம், திருப்போரூர், பூஞ்சேரி கூட்ரோடு உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து